Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
சூரரைப்போற்று பார்த்தேன்.. சூர்யா அழும் இடங்களிலெல்லாம் கண்ணீர்விட்டேன்.. நடிகர் வடிவேலு உருக்கம்!
சென்னை : நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.
முன்கூட்டியே கசிந்ததால்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்க தாமதமானதால் இந்தப் படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் கடந்த 11 ஆம் தேதி இரவு ரிலீஸானது. 11ஆம் தேதி நள்ளிரவு ரிலீஸ் ஆகவேண்டிய இந்தப் படம் இணையத்தில் கசிந்ததால் முன்கூட்டியே ரிலீஸானது.
புகழும் பிரபலங்கள்
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் கேரியரில் இந்தப்
படம் மாஸ்டர் பீஸாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலரும் சூரரைப்போற்று படத்தை புகழ்ந்து வருகின்றனர்.
நடிகர் வடிவேலு
இதனால் அமேஸான் பிரைமில் வியூஸ்களை குவித்து வருகிறது சூரரைப்போற்று திரைப்படம். இந்நிலையில் நடிகர் வடிவேலு சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்து உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கண்ணீர் வருகிறது
இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில், தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என பதிவிட்டுள்ளார்.
உண்மையா வாழ்ந்து இருக்கீங்க
அவரது இந்த பதிவு சுமார் 40 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. நடிகர் வடிவேலுவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், சூரரை போற்று உண்மையிலே,வெற்றியை அடைய போராட துடிக்கும் ஒரு மனிதனின் வாழ்வியலை, தத்துரூபமாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு படம்.. சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமா நடிக்காம, உண்மையா வாழ்ந்து இருக்கீங்க.. ஜிவி பிரகாஷ் பிஜிஎம் புல்லரிக்குது.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
எதிர்பார்த்து காத்திருக்கோம்
சூரரைப்போற்று படம் குறித்த நடிகர் வடிவேலுவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், உங்கள் படங்கள் எப்போது வரும் உங்களை படத்தில் காண எதிர்பார்த்து காத்திருக்கோம் என வடிவேலு மீதான ஆர்வத்தை கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
அழுதுகொண்டே இருக்கிறோம்
மற்றொரு நெட்டிசனான இவர் உங்களை எப்போது மறுபடியும் காண்பது என்று ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அழுதுகொண்டே இருக்கிறோம்.. எப்போது வந்தாலும் எங்கள் வைகைப்புயல் மக்கள் மனதில் இருக்கும் சிம்மாசன ராஜா தான்... என பதிவிட்டுள்ளார்.