Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நான் 10 வருஷமா லாக்டவுன்லதான் இருக்கேன்.. வாய்ப்பில்லாமல் கண்ணீர்விட்ட வடிவேலு..கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் வடிவேலு தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாதது குறித்து பேசி கண்ணீர்விட்டது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.
Recommended Video
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் வடிவேலு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார் வடிவேலு.
காமெடி உலகில் அரசன்
மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இதனாலேயே இன்றும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் இன்றும் அரசனாக வலம் வருகிறார்.
பெரும் வேதனைதான்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுளாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். எந்த படங்களிலும் அவரை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வேதனைதான். இந்நிலையில் நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் வேதனையுடன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..
அதாவது, திரையுலகினர் உள்ள நண்பேண்டா வாட்ஸ்அப் குரூப்பினருக்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடிவேலு, பாடகர் முகேஷுடன் இணைந்து செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.
பெரும் வேதனை..
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, நடிக்க உடம்பில் தெம்பு இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பெரும் வேதனை என்று கண் கலங்கினார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுனில் இருந்தீர்கள்.
10 வருடங்களாக லாக்டவுன்
ஆனால் நான் 10 வருடங்களாக லாக்டவுனில்தான் இருக்கிறேன் என்றும் வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா என்றும் வேதனையுடன் கூறினார். மேலும் நடிகர் வடிவேலு உடல் மெலிந்தும் காணப்பட்டார்.
மீண்டும் சூர்யாவுடன்
வடிவேலுவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கலங்கி வருகின்றனர். கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் அவர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.