twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் 10 வருஷமா லாக்டவுன்லதான் இருக்கேன்.. வாய்ப்பில்லாமல் கண்ணீர்விட்ட வடிவேலு..கலங்கும் ரசிகர்கள்!

    |

    சென்னை: நடிகர் வடிவேலு தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாதது குறித்து பேசி கண்ணீர்விட்டது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

    Recommended Video

    ஒடம்புல தெம்பு இருக்கு! ஆனா வாய்ப்பு கிடைக்கல Vadivelu கலங்கியுள்ளார்

    என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் வடிவேலு.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

    தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார் வடிவேலு.

    காமெடி உலகில் அரசன்

    காமெடி உலகில் அரசன்

    மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இதனாலேயே இன்றும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் இன்றும் அரசனாக வலம் வருகிறார்.

    பெரும் வேதனைதான்

    பெரும் வேதனைதான்

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுளாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். எந்த படங்களிலும் அவரை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வேதனைதான். இந்நிலையில் நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் வேதனையுடன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..

    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..

    அதாவது, திரையுலகினர் உள்ள நண்பேண்டா வாட்ஸ்அப் குரூப்பினருக்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடிவேலு, பாடகர் முகேஷுடன் இணைந்து செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.

    பெரும் வேதனை..

    பெரும் வேதனை..

    தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, நடிக்க உடம்பில் தெம்பு இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பெரும் வேதனை என்று கண் கலங்கினார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுனில் இருந்தீர்கள்.

    10 வருடங்களாக லாக்டவுன்

    10 வருடங்களாக லாக்டவுன்

    ஆனால் நான் 10 வருடங்களாக லாக்டவுனில்தான் இருக்கிறேன் என்றும் வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா என்றும் வேதனையுடன் கூறினார். மேலும் நடிகர் வடிவேலு உடல் மெலிந்தும் காணப்பட்டார்.

    மீண்டும் சூர்யாவுடன்

    மீண்டும் சூர்யாவுடன்

    வடிவேலுவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கலங்கி வருகின்றனர். கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் அவர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vadivelu tears for not getting cinema chance. He said i have been in lockdown for last 10 years without any cinema chance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X