Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆன்மீகமும் அன்பும் இருக்கு.. நிச்சயம் கொரோனா வராது.. வையாபுரி டிப்ஸ்!
சென்னை : நடிகர் வையாபுரி கொரோனா பற்றிய விழிப்புணர்வு காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் வையாபுரி தமிழ் சினிமா ரசிகர்களால் சிறந்த குணசித்திர நடிகராக அறியபட்டவர். இவர் அதிகபடியான காமெடி கதாபாத்திரங்களை எடுத்து நடித்தவர். சிறந்த நகைச்சுவை நாயகனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர். நடிகர் வையாபுரியும் மற்ற நடிகர்களை போல கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொலியில் நடிகர் வையாபுரி நாம் ஆன்மீகமும் அன்பும் நிறைந்த மக்களாக இருக்கிறோம் இதனால் நமக்கு கட்டாயம் கொரோனா தொற்று பரவாது என கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது இதனால் யாரும் பயப்பட தேவையில்லை நம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார் .
மேலும் நாம் சுத்தம் நிறைந்த மக்கள் நமக்கு இந்த நோய் அடிப்படையில் வராது இருந்தும் நமது ஊர்களில் கடைகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று தைரியமாக கூறியுள்ளார் .
நம் பண்பாடை பின்பற்றி அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள் . இதை போல பல விஷயங்களை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள். உதராணத்திற்கு நம் முன்னோர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டு வந்தால் வீட்டுக்குள் வரும் போது கை கால் கழுவி விட்டு தான் உள்ளே வர சொல்வார்கள். அதை நாம் தற்போது தவறாமல் பின் பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த காணொலியில் மேலும் சில இயற்கையான அறிவுரைகளை கூறியுள்ள வையாபுரி குழந்தைகளுக்கு காலையும் இரவும் உப்பு போட்டு வாய் கொப்பிளிக்க அறிவுரை கூறியுள்ளார். மேலும், இதே நேரத்தில் நாம் இஞ்சி , கடுகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டு இருப்பது நன்று இருந்தும் எல்லோரும் சொல்கிறார்கள் என்று ஒரே அடியாக அறைத்து குடிக்காதீர்கள் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இறுதியாக பல வதந்திகள் வாட்சாப்பில் பரவி வருகிறது அனைத்தையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் ரங்கநாதன் தெரு காலியாக இருக்கிறது அதை பார்க்க சில கூட்டம் கூடுகிறது. அதை பார்க்க செல்கிறோம் என எதிலும் மாட்டிகொள்ளாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.