Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரு ஆண்டை கடந்த விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம்.. விரைவில் 2வது பாகம் எடுக்கப் போறாங்களாம்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ரிலீசானது கோடியில் ஒருவன்.
இந்தப் படம் ரிலீசாகி தற்போது ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!
நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பன்முகத் திறமை காட்டி வருகிறார். முதலில் இசையமைப்பாளராகத்தான் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவக்கினார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து சலீம், நான் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை நடிகராகவும் நிலை நிறுத்தினார்.
பிச்சைக்காரன் படம்
விஜய் ஆண்டனிக்கு சிறப்பான கைக்கொடுத்தப் படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி அதன்மூலம் இயக்குநராகவும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் அதிரடி இசை
தமிழ் சினிமாவில் சிறப்பான இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, தற்போது தன்னுடைய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார். இவரது அதிரடியான இசைக்கு மற்றும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படும் நிலையில், தன்னுடைய எல்லையை சுருக்கிக் கொண்டுள்ளார்.
நான் நடிகன் இல்லை.. ஹீரோ
தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்துவருகிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றுவருகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் தான் நடிகன் இல்லை என்றும் ஹீரோ என்றும் விமர்சனங்களை தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் படம் வெளியானது.
ஒரு ஆண்டு நிறைவு
கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கோடியில் ஒருவன் படம் வெளியானது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா. அரசியல் களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
2வது பாகம் குறித்து அறிவிப்பு
மேலும் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான தன்னுடைய அமைதியான நடிப்பு மற்றும் அதிரடியான ஆக்ஷனில் இந்தப் படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி.
ரசிகர்கள் உற்சாகம்
இதனிடையே படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது குறித்த இந்த அறிவிப்பு விஜய் ஆண்டனி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா முதல் பாகத்திற்கு இசையமைத்திருந்தார். அவரது இசை வரவேற்பையும் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்திற்கும் அவரே இசையமைப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.