Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நடிகர் விஜய்!
சென்னை: வரி விலக்கு கோரிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.
இந்த காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வரி விலக்கு விவகாரம்.. தீர்ப்பை எதிர்த்து.. அப்பீல் செய்கிறாரா நடிகர் விஜய்? தீயாய் பரவும் தகவல்!
விஜய் மனு தள்ளுபடி
அந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு எனக்கூறி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
ரியல் ஹீரோக்கள்
மேலும் நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
வைரலான பில்
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. மேலும் நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்திய பில்களும் வைரலாயின.
விஜய்க்கு மன வருத்தம்
வரி விலக்கு வழக்கில் நீதிபதி இவ்வளவு காட்டமாக பேச வேண்டிய தேவையில்லை என்றும் கருத்துக்கள் எழுந்தன. நீதிபதியின் கடுமையான கருத்துக்களால் நடிகர் விஜய் மன வருத்தத்தில் இருந்ததாகவும் இதனை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
Recommended Video
திங்கட்கிழமை விசாரணை
இந்நிலையில் வரி விலக்கு கோருவது குடிமக்களின் உரிமை என்பதால் தீர்ப்பை எதிர்த்தும் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.