Don't Miss!
- News தமிழ்நாட்டில் இருந்து வந்து.. கர்நாடகாவில் குண்டு வைத்துள்ளனர்.. பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய் தேவரகொண்டா... உருவாகிறது சூப்பர் ஹிட் படத்தின் 3வது பாகம்!
சென்னை : தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது இந்தியா முழுவதும் அனைவராலும் அறியப்படும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் லைகர் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.
அபிஷேக்கை காப்பாற்ற துடித்த பாவனி… இந்த மனசுதான் சார் கடவுள் என்று பாராட்டிய ரசிகர்கள் !
விரைவில் பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க இருக்கும் விஜய் தேவரகொண்டா இப்பொழுது பிரபல சூப்பர் ஹிட் திரைப்படத்தின் 3வது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிறந்த நடிகராக
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று வர இப்பொழுது தென்னிந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக மாறியுள்ளார்.
முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், அர்ஜுன் ரெட்டி என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற தமிழ் சினிமாவிற்கு நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவுக்கு கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பிரம்மாண்ட கூட்டணியில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் லைகர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் பூரி ஜெகநாத் படத்தை இயக்கி வருகிறார். நடிகை சார்மி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகின்றனர்
ஆர்யா 3
கடந்த 2004ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமாரர் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆர்யா வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் 2009ஆம் ஆண்டு வெளியானத்து. ஆர்யா இரண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்த சூழலில் தற்போது ஆர்யா பாகம்-3 உருவாக உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய்தேவரகொண்டா
முதல் இரண்டு பாகங்களை இயக்கிய சுகுமார் மூன்றாவது பாகத்தையும் இயக்க தயாராகி வருகிறார். அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் இப்பொழுது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா மூன்றில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய்தேவரகொண்டா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இயக்குனர் சுகுமார் இப்போது புஷ்பா படத்தை இயக்கி வருகிறார் அதேசமயம் விஜய் தேவர்கொண்டா லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்களது படங்களை முடித்துவிட்டு அடுத்த அடுத்ததாக ஆர்யா 3ல் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.