Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உயிருக்கு போராடும் ரசிகை... நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்!
சென்னை : சென்னையில் கடும் நோய் பாதிப்பில் சிக்கிப் போராடிவரும் ரசிகை ஒருவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்த அர்ச்சனா (25), பல லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் கடும் நோய் பாதிப்புக்கு ஆளாகி போராடி வருகிறார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. டாக்டர்கள் கை விரித்து விட்ட நிலையில், பேச முடியாமல், நடக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் அர்ச்சனா.
இந்நிலையில், தீவிர விஜய் ரசிகையான அர்ச்சனா, அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அர்ச்சனாவின் பெற்றோர்.
அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்தித்தார் விஜய். கைகளை பற்றிக் கொண்டு அன்பாக பேசி மகிழ்ந்தார். அர்ச்சனாவின் உடல்நிலை பற்றியும் அவர் கேட்டு அறிந்தார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் அர்ச்சனா மிகவும் சந்தோஷமானார். முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. பின்னர் பெற்றோரிடம் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு விஜய் விடை பெற்று சென்றார்.