Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் நாளை தீர்ப்பு.. அபராதம் ரத்தாகுமா? இல்லை கட்ட நேரிடுமா?
சென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்தாத வழக்கு முன்னதாக நடைபெற்று பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது மற்றொரு சொகுசு காரான பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கான நுழைவு வரி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது மொத்த அபராதத்தையும் கட்ட சொல்வார்களா? என்கிற பரபரப்பு கிளம்பிஉள்ளது.
விஜய், ஹ்ரித்திக், அல்லு அர்ஜுன் -யார் உங்கள் biopic-ல் நடிக்கலாம்? பிரபுதேவாவின் நச் பதில் பாருங்க!
சொகுசு கார் பிரச்சனை
நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி செலுத்தவில்லை என ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் வழக்கு பெரிதும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய்யை தேச விரோதியாக சித்தரித்தது தவறு என்றும் அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வெளியாகின.
BMW X5
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்க போகிறது உயர்நீதிமன்றம்.
400 சதவீதம் அபராதம்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது.
நாளை தீர்ப்பு
வணிக வரித்துறை மற்றும் நடிகர் விஜய் தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு எப்படி வரும் என்கிற பரபரப்பு கோலிவுட் முழுவதும் எழுந்துள்ளது.