twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் நாளை தீர்ப்பு.. அபராதம் ரத்தாகுமா? இல்லை கட்ட நேரிடுமா?

    |

    சென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்தாத வழக்கு முன்னதாக நடைபெற்று பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது மற்றொரு சொகுசு காரான பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கான நுழைவு வரி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது மொத்த அபராதத்தையும் கட்ட சொல்வார்களா? என்கிற பரபரப்பு கிளம்பிஉள்ளது.

    விஜய், ஹ்ரித்திக், அல்லு அர்ஜுன் -யார் உங்கள் biopic-ல் நடிக்கலாம்? பிரபுதேவாவின் நச் பதில் பாருங்க!விஜய், ஹ்ரித்திக், அல்லு அர்ஜுன் -யார் உங்கள் biopic-ல் நடிக்கலாம்? பிரபுதேவாவின் நச் பதில் பாருங்க!

    சொகுசு கார் பிரச்சனை

    சொகுசு கார் பிரச்சனை

    நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி செலுத்தவில்லை என ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் வழக்கு பெரிதும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய்யை தேச விரோதியாக சித்தரித்தது தவறு என்றும் அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வெளியாகின.

    BMW X5

    BMW X5

    கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து
    இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்க போகிறது உயர்நீதிமன்றம்.

    400 சதவீதம் அபராதம்

    400 சதவீதம் அபராதம்

    பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது.

    நாளை தீர்ப்பு

    நாளை தீர்ப்பு

    வணிக வரித்துறை மற்றும் நடிகர் விஜய் தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு எப்படி வரும் என்கிற பரபரப்பு கோலிவுட் முழுவதும் எழுந்துள்ளது.

    English summary
    Actor Vijay luxury car case judgement will arrive tomorrow in Chennai High Court. Actor wish to avoid additional charges in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X