Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு!
சென்னை: படப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல வில்லன் நடிகை கைது செய்யப்பட்ர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ராஸ். இவர் தாம்மால், ரன், வெல்கம், டெல்லி பெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
மேலும் எ சூட்டபிள் பாய் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிசட்டை படத்தின் மூலம் அறிமுகமானார்.
பீட்டர் என்னை விரட்டினாரா.. அவரோடு எந்த உறவும் இல்ல.. உணர்ச்சியற்றவளாகிவிட்டேன்.. வனிதா உருக்கம்!
கவர்ந்த வில்லன்
இந்த படத்தில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதிகம் பேசாமல் அதிரடி காட்டாமல் இருந்த அவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.
ஷெர்னி படம்
இந்நிலையில் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் விஜய் ராஸ். இவர் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டத்தில் நடந்து வருகிறது.
ஷுட்டிங் ஸ்பாட்
இதற்காக படக்குழுவினர் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கிருந்து ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
நடிகையடம் தவறாக நடந்தார்
இந்நிலையில் நடிகர் விஜய் ராஸ் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கைது
நடிகையின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோண்டியா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த நடிகை விஜய் ராசை கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பரபரப்பு
இந்த தகவலை கோண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவர் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டது பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.