Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தலைவனை பாக்காமலே போறேன்.. விஜய் குறித்து பதிவிட்டு தற்கொலை செய்த பாலா.. சோகத்தில் முழ்கிய ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
மேலும் சிங்கப்பூர், மலேசியான என பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் விஜய். விஜய் ஏதாவது சொன்னாலும் செய்தாலும், அல்லது அவரது படம் குறித்த ஏதாவது அப்டேட் வந்தாலும் அதனை ட்ரென்ட்டாக்குவதில் விஜய் ரசிகர்கள் வேற லெவல்.
கொரோனா வைரஸ் பாதிப்பு.. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை!
மீரா மிதுன் விவகாரம்
விஜய் குறித்து யாராவது தரக்குறைவாக பேசினாலும் உண்டு இல்லை என செய்து விடுவார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகை மீரா மிதுன். விஜய் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் தரக்குறைவாக பேசியதால் மீரா மிதுனை வச்சு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தலைவனை பார்க்காமலே..
இந்நிலையில் விஜயின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட கையோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா என்ற விஜயின் ரசிகர் டிவிட்டரில் தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் கண்ணீர் விடும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டுக்கு பிறகு தற்கொலை
மேலும் தன்னுடைய அந்த டிவிட்டை நடிகர் விஜய்க்கும் டேக் செய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டை பதிவிட்ட கையோடு பாலா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.
ரசிகர்கள் கோரிக்கை
பாலா காதல் தோல்வி, குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அவரது மரணம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரசிகர்கள் உருக்கம்
மேலும் #RIPBala என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் பாலா வாட்ஸ்அப்பில் சேட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் பாலா தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றும் விஜய் ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் வேதனை
நடிகர் விஜய் பாலாவின் குடும்பத்திற்கு போன் செய்து பேசினாலே போதும் அவரது ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்றும் இந்த செய்து நடிகர் விஜய்க்கு போய் சேர வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.