twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிவிப்பு

    |

    SA Chandrasekaran
    மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை.

    இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்பதே மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

    மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை விஜய் ஏற்றுள்ளார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது.

    எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களும் சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.

    English summary
    Actor Vijay’s Makkal Iyakkam is all set to contest the ensuing local body elections in the state. His father and film director S. A. Chandrasekar told that the actor has given the green signal to his fans to contest the polls in consensus with the local AIADMK functionaries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X