திருச்சி.. மதுரை.. அடுத்தது எங்கே தெரியுமா.. முழுக்க முழுக்க கோவையில்தான் தரமான சம்பவம்!
கோவை : நடிகர் விக்ரமின் கோப்ரா படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வரும் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Recommended Video
இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி என இரண்டு கதாநாயகிகள் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில் பல தருணங்களில் ரிலீசும் தள்ளிப் போனது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் எப்போதுமே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவர். இவரது நடிப்பில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளன. இந்த வெற்றி இவருக்கு சாதாரணமாக சாத்தியப்படவில்லை. சினிமா மீது இவர் கொண்ட காதல், இல்லையில்லை வெறியே இவரது தொடர் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.

மகான் படம்
சமீபத்தில் இவர் தனது மகன் த்ருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களுடன் நடித்திருந்த மகான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வெற்றியையும் பெற்றது. ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓடிடியில் வெளியானது என்ற குறை விக்ரமிடம் காணப்பட்டது.

கேரியர் பெஸ்ட் கோப்ரா படம்
இந்நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்ததாக கோப்ரா படம் திரையரங்குகளில் இன்னும் ஒரே வாரத்தில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் விக்ரம் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமையும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மிரட்டியுள்ளது.

சென்டிமெண்ட் வேல்யூ
20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அதையும் மீறி படத்தில் சென்டிமெண்ட் வேல்யூ உள்ளதாக அவர் சமீபத்திய தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனிடையே படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது கோப்ரா டீம் பிரமோஷன் டூரை அறிவித்துள்ளது.

சாதிக்க வேண்டும் என்ற ஃபயர்
நேற்றைய தினம் திருச்சியில் காலையில் பிரமோஷனை செய்திருந்தது படக்குழு இதன்போது மாணவர்களுடன் கலந்துரையாடினார் விக்ரம். மாணவர்களுக்குள் சாதிக்க வேண்டும் என்ற ஃபயர் இருந்தால் எதற்காகவும் யாருக்காகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்றும் அந்த ஃபயர் என்றாவது ஒருநாள் அவர்களை உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மதுரையில் பாட்டுப் பாடிய சியான்
தொடர்ந்து மாலையில் மதுரையிலும் பிரமோஷன் பணிகளை தொடர்ந்தார் விக்ரம். அப்போது மேடையேறி பேசிய விக்ரம் ஒரு கட்டத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடலை பாடத் துவங்கினார். ரசிகர்களை ரண்டக்க ரண்டக்க என்று கோரஸ் பாடக் கேட்டுக் கொண்டார். சிறப்பாக அமைந்தது இந்தப் பிரமோஷன்.

ரசிகர்களை கவர்ந்த ஹேர்ஸ்டைல்
தொடர்ந்து மதுரையில் தான் அதிகமான இயக்குநர்களைத்தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அதிகமான பாடகர்களும் இருப்பதை தான் இப்போதுதான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது இயல்பான லுக்கில் அவர் காணப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக அவரது ஹேர்ஸ்டைல் அனைவரையும் கட்டிப் போட்டது.

கோவையில் பிரமோஷன்
இதனிடையே இன்றைய தினம் கோவையில் அடுத்தடுத்து காலை மற்றும் மாலையில் இரண்டு இடங்களில் பிரமோஷன்களில் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா டீம் ஈடுபட உள்ளது. சமீபத்தில் இதயத்தில் சிறிய பிரச்சினை காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார் விக்ரம். தொடர்ந்து பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் கூட பங்கேற்கவில்லை. இந்நிலையில் கோப்ரா படத்தின் பிரமோஷனுக்காக சுழன்றடிக்கும் சூறாவளியாக களமிறங்கியுள்ளார் விக்ரம்.


Click it and Unblock the Notifications











