Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜாக்கிரதையா இருங்க.. அன்புக்குரியவர்களை பத்திரமா பாத்துக்குங்க.. நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்!
சென்னை: பாதுகாப்பாய் இருங்கள் அன்புக்குரியவர்களை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என நடிகர் விக்ரம் பிரபு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
என் உடம்புல கொரோனா பார்ட்டி பண்ணுது.. அதை நான் அழிக்காம விட மாட்டேன்.. நடிகை கங்கனா ரனாவத் சவால்!
பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
ஊரடங்கு அறிவிப்பு
இதனால் பல மாநில அரசுகள் செய்வதறியாது விழி பிதுங்கி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு உருக்கம்
கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சினிமா நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபு மக்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என உருக்கமாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கற்பனைக்கும் சக்திக்கும் மீறி
இதுதொடர்பான அவரது பதிவில், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். நம்முடைய கற்பனைக்கும் சக்திக்கும் மீறிய விஷயங்களை நிஜத்தில் சந்தித்து வருகிறோம். இந்த பூமியையும் அதில் உள்ள மக்களையும் மதியுங்கள். இது உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஜாக்கிரதையாய் இருங்கள்..
உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் உங்களின் அன்புக்குரியவர்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பார்த்துக்கொள்ள முடியும். மனசு விளையாடலாம்.. நண்பர்களுடன் பேசுங்கள், வரும் முன் தடுப்பதே நல்லது. அதை நிஜத்திலும் பார்க்கிறோம். ஜாக்கிரதையாய் இருங்கள்.. இந்த நேரத்தை கடந்து வந்து விடுவோம் என பதிவிட்டுள்ளார்.