Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்கிரதையா இருங்க.. அன்புக்குரியவர்களை பத்திரமா பாத்துக்குங்க.. நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்!
சென்னை: பாதுகாப்பாய் இருங்கள் அன்புக்குரியவர்களை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என நடிகர் விக்ரம் பிரபு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
என் உடம்புல கொரோனா பார்ட்டி பண்ணுது.. அதை நான் அழிக்காம விட மாட்டேன்.. நடிகை கங்கனா ரனாவத் சவால்!
பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
ஊரடங்கு அறிவிப்பு
இதனால் பல மாநில அரசுகள் செய்வதறியாது விழி பிதுங்கி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு உருக்கம்
கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சினிமா நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபு மக்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என உருக்கமாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கற்பனைக்கும் சக்திக்கும் மீறி
இதுதொடர்பான அவரது பதிவில், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். நம்முடைய கற்பனைக்கும் சக்திக்கும் மீறிய விஷயங்களை நிஜத்தில் சந்தித்து வருகிறோம். இந்த பூமியையும் அதில் உள்ள மக்களையும் மதியுங்கள். இது உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஜாக்கிரதையாய் இருங்கள்..
உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் உங்களின் அன்புக்குரியவர்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பார்த்துக்கொள்ள முடியும். மனசு விளையாடலாம்.. நண்பர்களுடன் பேசுங்கள், வரும் முன் தடுப்பதே நல்லது. அதை நிஜத்திலும் பார்க்கிறோம். ஜாக்கிரதையாய் இருங்கள்.. இந்த நேரத்தை கடந்து வந்து விடுவோம் என பதிவிட்டுள்ளார்.