Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!
லண்டன்: லண்டன் போலீசாரிடம் சிக்கி தவித்த பிரபல நடிகையை நடிகர் விமல் சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் மை பாஸ். இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் தற்போது தமிழில் சண்டகாரி தி பாஸ் என உருவாகி வருகிறது. இதில் நடிகர் விமல், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு
இந்தப் படத்தை மதுர, மிரட்டல், மோகினி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர் மாதேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
குடியுரிமை பகுதி
இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டியதாக தெரிகிறது.
சுற்று வளைத்த போலீசார்
இதனால் அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் என்று போலீசார் அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்பியுள்ளனர்.
காப்பாற்றிய விமல்
அப்போது அந்த இடத்திற்கு வந்த நடிகர் விமல் அவரிடம் உள்ள ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து எதற்காக வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரேயாவை விடுவித்தனர்.
கவர்ச்சி போட்டோக்கள்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஷ்ரேயா திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர விரும்பிய அவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!