Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!
லண்டன்: லண்டன் போலீசாரிடம் சிக்கி தவித்த பிரபல நடிகையை நடிகர் விமல் சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் மை பாஸ். இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் தற்போது தமிழில் சண்டகாரி தி பாஸ் என உருவாகி வருகிறது. இதில் நடிகர் விமல், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு
இந்தப் படத்தை மதுர, மிரட்டல், மோகினி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர் மாதேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
குடியுரிமை பகுதி
இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டியதாக தெரிகிறது.
சுற்று வளைத்த போலீசார்
இதனால் அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் என்று போலீசார் அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்பியுள்ளனர்.
காப்பாற்றிய விமல்
அப்போது அந்த இடத்திற்கு வந்த நடிகர் விமல் அவரிடம் உள்ள ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து எதற்காக வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரேயாவை விடுவித்தனர்.
கவர்ச்சி போட்டோக்கள்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஷ்ரேயா திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர விரும்பிய அவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.