Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பணம் பறிக்க பார்க்கிறார்கள்.. மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. தயாரிப்பாளருக்கு பிரபல நடிகர் எச்சரிக்கை!
சென்னை: 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்ததை தொடர்ந்து பிரபல நடிகரான விமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் தனது மனைவியை நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
2 கோடி ரூபாய் இழப்பீடா.. கங்கனா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஹைகோர்ட்டில் மும்பை மாநகராட்சி பதில்!
விமல் மீது புகார்
அண்மையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்பமனுவையும் தம்பதிகள் சகிதமாக கொடுத்தனர். இந்நிலையில் நடிகர் விமல் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, நடிகர் விமலிடம் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதை திருப்பி தரவில்லை என்றும் புகார் கொடுத்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவறான தகவல்
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். அதாவது என்னை பற்றிய தவறான செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்திருப்பதை பார்த்தேன் அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
எந்த தொடர்பும் இல்லை
யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பணம் பறிக்கும் நோக்கம்
மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும் என்று கூறியிருக்கிறார் விமல்.