Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாடல் அழகியையும் அவரது தாயையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்.. விஷால் பட நடிகர் ஒப்புதல்!
திருவனந்தபுரம்: மாடல் அழகி தன் மீது கூறிய பாலியல் குற்றத்தை நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விநாயகன். இவர் சிலம்பாட்டம், மரியான் மற்றும் விஷாலின் திமிரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாளப் படங்களிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அண்மையில் பாஜகவுக்கு எதிராக கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார் விநாயகன்.
என் உள்ளாடையை மோந்து பாருங்க.. சூப்பர்ஸ்டார் நடிகர்கள் பற்றி ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு
பாலியல் புகார்
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாடலும் சமூக ஆர்வலருமான மிருதுளா தேவி கடந்த ஜூன் மாதம் மீடூவில் நடிகர் விநாயகன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கல்பெட்டா காவல் நிலையத்தில் மிருதுளா தேவி புகார் அளித்திருந்தார்.
உண்மையல்ல
புகாரின் அடிப்படையில் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி விடுவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விநாயகன், நான் நீதிமன்றத்தில் சரணடைந்ததால் என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாகிவிடாது என்றார்.
குற்றப்பத்திரிக்கை
இதனை தொடர்ந்து விநாயகன் தன்னிடம் பேசியது தொடர்பான போன் ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார் மிருதுளா தேவி. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை கல்பெட்டா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அதில் மாடல் அழகி மிருதுளா தேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கல்பெட்டா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க