Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்படித்தான்.. காலை அமுக்குங்க… மனைவியிடம் மொக்கை வாங்கிய வினோத் பாபு!
சென்னை: நடிகர் வினோத்பாபு மனைவிக்கு பாடிக்கொண்டே கால் அமுக்கிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நாடக நடிகரான வினோத்பாபு ஊரடங்கு சமயத்தில் தன் நேரத்தை முழுவதுமாக தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது வீட்டில் மனைவிக்கு கால் அமுக்கிய படி 'பூவே செம்பூவே' என்ற இளையராஜாவின் பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியிருக்கிறார் .
சொல்ல துடிக்குது மனசு என்ற படத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடும் பாடல் தான் 'பூவே செம்பூவே' பாடல் இந்த பாடலை மிக அழகாக பாடியிருக்கிறார் வினோத்பாபு. இந்த பாடலை பாடும் போது அவரது மனைவி ஆகா சூப்பர் என்று அவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.
இதன்பின் வினோத்பாபு தன் மனைவியின் காலை அமுக்கி கொண்டே பாடல் நன்றாக இருக்கிறதா என்று கேட்க மனைவி இன்னொரு முறை என்று கூறுகிறார். இதனால், உற்சாகம் அடையும் வினோத் இன்னொரு பாடல் பாடவா என்று ஆர்வமாக கேட்கிறார் ஆனால் அவரது மனைவியோ இல்லை என்று தன் மற்றொரு காலை அமுக்கும் படி கேட்க மொக்கை வாங்கிய படி காலை அமுக்கி விடுகிறார் வினோத்.
மனோபாலா கொடுத்த ஐடியா.... பிளாக் பாண்டி போட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்!
வினோத்பாபு தற்போது விஜய் தொலைகாட்சியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் வினோத்பாபு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்கு முன் வினோத்பாபு ஆதித்யா தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டிலே இருந்து தங்களின் உறவுகளோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இப்படியாக வினோத்பாபுவும் தன் மனைவியுடன் அதிகபடியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.