Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அப்படித்தான்.. காலை அமுக்குங்க… மனைவியிடம் மொக்கை வாங்கிய வினோத் பாபு!
சென்னை: நடிகர் வினோத்பாபு மனைவிக்கு பாடிக்கொண்டே கால் அமுக்கிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நாடக நடிகரான வினோத்பாபு ஊரடங்கு சமயத்தில் தன் நேரத்தை முழுவதுமாக தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது வீட்டில் மனைவிக்கு கால் அமுக்கிய படி 'பூவே செம்பூவே' என்ற இளையராஜாவின் பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியிருக்கிறார் .
சொல்ல துடிக்குது மனசு என்ற படத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடும் பாடல் தான் 'பூவே செம்பூவே' பாடல் இந்த பாடலை மிக அழகாக பாடியிருக்கிறார் வினோத்பாபு. இந்த பாடலை பாடும் போது அவரது மனைவி ஆகா சூப்பர் என்று அவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.
இதன்பின் வினோத்பாபு தன் மனைவியின் காலை அமுக்கி கொண்டே பாடல் நன்றாக இருக்கிறதா என்று கேட்க மனைவி இன்னொரு முறை என்று கூறுகிறார். இதனால், உற்சாகம் அடையும் வினோத் இன்னொரு பாடல் பாடவா என்று ஆர்வமாக கேட்கிறார் ஆனால் அவரது மனைவியோ இல்லை என்று தன் மற்றொரு காலை அமுக்கும் படி கேட்க மொக்கை வாங்கிய படி காலை அமுக்கி விடுகிறார் வினோத்.
மனோபாலா கொடுத்த ஐடியா.... பிளாக் பாண்டி போட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்!
வினோத்பாபு தற்போது விஜய் தொலைகாட்சியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் வினோத்பாபு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்கு முன் வினோத்பாபு ஆதித்யா தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டிலே இருந்து தங்களின் உறவுகளோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இப்படியாக வினோத்பாபுவும் தன் மனைவியுடன் அதிகபடியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.