Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலாவிற்காக வரிந்து கட்டும் விஷால்... ‘காவிரி பற்றி பேசியதில் என்ன தவறு?’ என டிவிட்டரில் கேள்வி!
காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. அடுத்தமாதம் 7ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால், அவரது 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும், ரஜினி ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Wat Rajini sir spoke bout Cauvery issue is called responsibility n freedom of https://t.co/LHXXpG78C3 cn they stop #kaala release n Karnataka in retaliation.i sincerely hope the Karnataka film chamber and fellow brothers resolve this issue.we all r Indians https://t.co/VdsL1fQOXw
— Vishal (@VishalKOfficial) May 30, 2018
அந்தவகையில், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "காவிரி விவகாரம் குறித்து ரஜினி சார் பேசியது கடமை மற்றும் அவரது பேச்சுரிமை. இதை காரணமாக வைத்து எப்படி கர்நாடகாவில் காலா படத்தை தடை செய்யலாம். இந்த பிரச்சினைக்கு கர்நாடகா பிலிம் சேம்பர் மற்றும் அதன் நிர்வாகிகள் உரிய தீர்வு தருவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் நாம் அனைவருமே இந்தியர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.