Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யானை மீது ஒரே பாய்ச்சலில் ஏறி அமர்ந்த விஷ்ணு விஷால்.. தீயாய் பரவும் காடன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
சென்னை: காடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
தனக்கான கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
|
தெலுங்கு வர்ஷன்
பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஆரண்யா காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனாக உருவாகி உள்ளது.
முக்கிய கேரக்டரில் ராணா
தமிழில் உருவாகியுள்ள காடன் படம் நாளை மறுநாள் அதாவது வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணா டக்குபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
யானை மீது அமர்ந்து
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காடன் படத்தின் காட்சி ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார. இதில் பிரமாண்டமாய் நிற்கும் யானையின் மீது செம அசத்தலாய் ஏறி அமர்ந்து ஆட்டம் போடுகிறார் விஷ்ணு விஷால்.
இன்னும் 2 நாட்களில்
பார்க்கவே படுஜோராக உள்ளது இந்த காட்சி. மேலும் நானும் உன்னியும் எப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப தொடங்கினோமோ அப்போது இப்படி ஜம்ப் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளில் பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.