Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"விஜய் சொன்னதால் அது மந்திர வார்த்தையாகி விட்டது".. பிகில் சிவாஜி சர்ச்சை பேச்சு குறித்து விவேக்!
சிவாஜி பட பாடல் குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சிவாஜி பட பாடலை குறிப்பிட்டு தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழா தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை வெளிவந்து கொண்டே இருக்கிறது.
விழாவில் பேசிய நடிகர் விவேக், விஜய்யை புகழ்வதற்காக சில விஷயங்களை கூறினார். அதில் முக்கியமானது, நெஞ்சில் குடியிருக்கும் எங்க சனம் வெறித்தனம் என்ற பாடல் குறித்து அவர் பேசியது. அதாவது நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் கடந்த 1960ம் ஆண்டு வெளிவந்த இரும்புத்திரை படத்தில் இடம் பெற்ற நெஞ்சில் குடியிருக்கும் எனும் பாடலை அவர் குறிப்பிட்டு பேசினார். நெஞ்சில் குடியிருக்கும் என சிவாஜி பாடிய போது ஏற்படாத வெறித்தனம், விஜய் வாயில் இருந்து அந்த வார்த்தை வெளிவந்தபோது ஏற்பட்டிருக்கிறது என்றார்.
இதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக இப்படி பேசுவீர்களா" என சிவாஜி சமூக நலப் பேரவையை சேர்ந்தவர்கள் விவேக்கிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.
— Vivekh actor (@Actor_Vivek) September 25, 2019
இதுகுறித்து டிவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விவேக். தனது பதிவில் அவர், "1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி"நெஞ்சில் குடி இருக்கும்". அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க", என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. என்ன படம் வேணும் ஓட்டு போடுங்க! அசத்தும் சன்டிவி!
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாளையத்தம்மன் படத்தில், சிவாஜியின் பராசக்தி வசனம் இமிடேட் செய்து பேசி நடித்தார் விவேக். அது அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதுபற்றி பேசும் போது, தன்னால் சிவாஜிக்கு பெருமை என விவேக் கூறியதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் அவ்வாறு பேசவில்லை என்றும், சிவாஜியால் தான் தனக்கு பெருமை என்று தான் கூறினேன் என்றும் விவேக் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.