Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அன்பு தனுஷ்.. உங்கள் குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல்! நடிகர் விவேக்..!
சென்னை: நடிகர் விவேக் தனுஷின் குரலில் பாடல் உயிர்பெறுவதாகக் கூறியுள்ளார்.
இயக்குனர் விபி.விஜி இயக்கத்தில் விவேக், தேவையானி, அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் எழுமின்.
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கணேஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். இப்படம் தற்காப்பு கலையில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படத்தில் எழடா என்ற பாடலை தனுஷும், எழு... எழு என்ற பாடலை அனிருத்தும் பாடியுள்ளனர்.
அதில் எழடா என்ற பாடல் லிங்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ள விவேக், அன்பு தனுஷ் உங்கள் உணர்வு பூர்வமான குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல் என பதிவிட்டுள்ளார்.
அன்பு தனுஷ் @dhanushkraja உங்கள் உணர்வு பூர்வமான குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல் @gannyclef https://t.co/jA3frw0sCo
— Vivekh actor (@Actor_Vivek) August 24, 2018
ஒய் திஸ் கொலவெரி என்று வெறித்தனமான பாடல்களை பாட ஆரம்பித்த தனுஷ், போ இன்று நீயாக... வெண்பனி மலரே... போன்ற பாடலுக்கு பிறகு மிகச்சிறந்த பின்னனி பாடகராகவே மாறிவிட்டார்.
இப்போது எழுமின் படத்திற்காக எழடா.. எழடா என அவர் பாடியிருக்கும் பாடல், சோர்ந்திருக்கும் மகனை ஒரு தந்தை மென்மையாக தட்டி எழுப்புவதுபோல் அமைந்துள்ளது. இப்பாடலை தமிழ்நங்கு எழுதியுள்ளார்.