Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
தல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்?
Recommended Video
சென்னை: நடிகர் விவேக் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விவேக், தேவயானி நடித்துள்ள படம் எழுமின். தற்காப்பு கலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று ரிலீசாகியுள்ள எழுமின் திரைப்படத்தில் அழகம்பெருமாள், பிரேம், பசங்க சிவகுமார், விஜய் ஆனந்த், சுபகீதா மற்றும் பலர் நடித்துள்ளனர். விபி.விஜி தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படம் பற்றி ட்வீட் செய்துள்ள நடிகர் விவேக், ரஜினி, அஜித் மற்றும் விஜய்யுடன் நடித்த புகைப்படங்களை பதிவிட்டு, நான் தலைவர், தல, தளபதியோடு நடித்தபோது நீங்கள் தந்த ஆதரவை இப்போது மாணவர்களுக்காக நான் நடித்திருக்கும் எழுமின் படத்திற்கும் தருக ரசிகப் பெருமக்களே என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் நிச்சயமாக எழுமின் படத்தை திரையரங்கில் பார்ப்போம் சார் என்று உறுதியளித்து வருகின்றனர்.
தலைவர்/தல/தளபதி இவர்களோடு நடித்தபோது நீங்கள் தந்த ஆதரவை, இப்போது மாணவர்களுக்காக நான் நடித்திருக்கும் “எழுமின்” படத்துக்கும் தருக, ரசிகப் பெருமக்களே! pic.twitter.com/MgZiRigpSr
— Vivekh actor (@Actor_Vivek) October 17, 2018
சண்டக்கோழி 2, வட சென்னை போன்ற பெரிய படங்கள் ரிலீஸாகியிருப்பதால், எழுமின் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.