Just In
- 8 min ago
ஆதாரமற்றக் குற்றச்சாட்டு.. அவதூறு புகார்.. நேரில் ஆஜராக நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்!
- 21 min ago
பத்ரகாளியான பாலா.. கையில் யார் தலையெல்லாம் இருக்குன்னு பாருங்க.. கேவலமான எடிட்.. ஜோ மைக்கேல் புகார்
- 39 min ago
ஆரி கன்னத்தில் முத்தம்.. போட்டோவை பகிர்ந்து மியூஸ் யூ என உருகும் பிரபலம்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- 1 hr ago
மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்!
Don't Miss!
- Automobiles
சொகுசு கார் மோதி இரு போலீஸார் பலி... சென்னையில் அரங்கேறிய கோர சம்பவம்... என்ன நடந்தது?
- News
ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்! மதுரையில் கொடூரம்
- Sports
வெளியே போங்க.. முக்கிய வீரர் உட்பட பலரை துரத்திய கோலி.. மீட்டிங்கில் பொங்கிய கேப்டன்.. மர்மம்!?
- Finance
முதன் முறையாக 50,000 தொட்ட சென்செக்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..!
- Lifestyle
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூர்யா, கார்த்திக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றி கூறியுள்ளார் நடிகர் விவேக் ! ஏன் தெரியுமா?

சென்னை: நடிகர்கள் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் நடிகர் விவேக் நெஞ்சு நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த 13ம் தேதி ரிலீசான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயம், ஆணவக் கொலை மற்றும் குடும்ப உறவுகள் பற்றி பேசியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விவசாயிகள் பங்கேற்பு
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு நிதி
இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 விவசாயிகளுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா
இதேபோல், தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார்.
|
விவேக் டிவிட்
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகள்
அதில் அவர் கூறிருப்பதாவது,கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியை, இயற்கை விவசாயிகள் உடன் கொண்டாடி அவர்களுக்கு பெரும் நிதி உதவியும் செய்த சூர்யா, கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகள் என தெரிவித்துள்ளார் விவேக்.