Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கொரோனாவுக்கு பயந்து சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்.. பிரபல நடிகர் உருக்கம்!
சென்னை: கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியேறி வரும் நிலையில் சென்னை குறித்து நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் உள்ளார் விவேக்.
ஏராளமான படங்களில் நடித்துள்ள விவேக், சமூகம் சார்ந்த நற்பணிகளையும் செய்து வருகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட விவேக் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார்.
சுஷாந்த் சிங் தற்கொலை.. சிக்கித் தவிக்கும் சல்மான் கான், கரண் ஜோஹர் பெயர்கள்.. என்ன தான் நடக்குது?
கொரோனா வைரஸ்
டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக உள்ள விவேக், தற்போது சென்னை குறித்து உருக்கமாக டிவிட்டியுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
சென்னையை நம்பி
அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாத்திர பண்டங்களுடன் வெளியேறி வருகின்றனர். சென்னையை நம்பி இனி வாழ முடியாது என கூறி அவர்கள் ஊரை காலி செய்கின்றனர்.
மீளும்.. வாழும்..
இதனை அறிந்த நடிகர் விவேக் சென்னை குறித்து உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். அதாவது, எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்! என பதிவிட்டுள்ளார்.
வாழ்வு அளிக்கும்
நடிகர் விவேக்கின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சரியான பதிவு என பாராட்டி வருகின்றனர். விவேக்கின் டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், சரியான பதிவு.. அனைத்து மாவட்ட மக்கள் ஒன்றாய் இருந்த ஒரே தலைநகர் நம் சென்னை.. இந்த துயரம் விரைவில் நீங்கி எப்போதும் போல், வந்தவருக்கு வாழ்வு அளிக்கும் சென்னையாக வர சில நாட்களை உள்ளன.. என தெரிவித்துள்ளார்.