Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா.. மே இறுதியில் விடிவு கிடைக்கும்னு சொல்றாங்க..' நடிகர் விவேக் லேட்டஸ்ட் வீடியோ!
சென்னை: முழுமையாக ஊரடங்கை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து வெளிவரலாம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொடூரமாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸுக்கு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
லாக்டவுன் முடிஞ்சதும் ஆரம்பிக்கிறாங்களாமே! பிரபல தெலுங்கு ஹீரோவுடன் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
கொரோனா
ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த உயிர்க்கொள்ளித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 872 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,020 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
புதிய வீடியோ
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய வீடியோ ஒன்றை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்ப முழுமையான ஊரடங்கு அறிவிச்சிருக்காங்க. எதனால இது? என்னைக்கு இதுல இருந்து வெளிய வருவோம், என்னைக்கு சஜமாக இருப்போம்னு எல்லோரும் கேட்கிறோம். என்னைக்கு, அரசு சொல்றதை நாம கேட்கிறோமோ, அன்னைக்குத்தான் நாம வெளிய வரமுடியும்.
கூட்டமாக நிற்பது
அதனாலதான் இந்த ஊரடங்கு தொடருது. இந்த தொற்று குறைஞ்சு, ஸீரோ கேசஸ்னு வரணும். அப்பதான் நாமளும் அதுல இருந்து வெளிய வர உதவும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. எங்க போனாலும் பைக்ல பிரெண்ட்ஸ்களோட போறது, கடைகள்ல கூட்டமா நிற்கறதை பார்க்கிறோம். இப்படி இருக்கிற வரைக்கும் நம்மால ஊரடங்கை நிறுத்த முடியாது.
முழுமையான ஊரடங்கு
நாம இப்ப முக்கியமான கட்டத்துல இருக்கோம். மக்களே, இளைஞர்களே, கொஞ்சம் யோசிச்சு பாருங்க. முழுமையான ஊரடங்கை பின்பற்றி, எப்படியாவது இந்த தொற்று குறைஞ்சு, கேசஸ் ஸீரோன்னு வரும்போது நாம வெளிய வர முடியும். அது நம்ம கையிலதான் இருக்கு. நாம இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் செய்யணும்.
விடிவு கிடைக்கலாம்
சிங்கப்பூர்ல இருந்த வந்த லேட்டஸ்ட் ஆய்வின்படி, மே மாத இறுதியில இதுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க, உலகத்துக்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு, தமிழக அரசுடனும் இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் நடிகர் விவேக் கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வுக்காகவும், டாக்டர் சைமன் இறந்தபோது நடந்த வன்முறையின்போதும் நடிகர் விவேக் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.