Don't Miss!
- Finance வெங்காய பிஸ்னஸ் ஐடியா: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் ஈட்டுவது எப்படி?
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- News ஷாக்கிங்! அமெரிக்கா சொன்னதையே கேட்காத இஸ்ரேல்.. உலக நாடுகளை 3ம் உலகப்போருக்கு இழுக்கும் நெதன்யாகு?
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எளிமை இனிமை உழைப்பு உயர்வு.. இப்பூக்கள் பூத்த “வசந்த்”தகாலம் விடை பெற்றதே.. நடிகர் விவேக் உருக்கம்!
சென்னை: எளிமை இனிமை உழைப்பு உயர்வு ஆகிய பூக்களை பூத்த வசந்த காலம் விடை பெற்றதாக நடிகர் விவேக் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.
70 வயதான வசந்தகுமார், கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
வசந்தகுமார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் வசந்தகுமாரின் சிரித்தப்படியே இருக்கும் அந்த முகத்தை எப்போது பார்ப்போம் என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
வசந்தகுமாரின் மறைவு பேரதிர்ச்சி.. பெரும் துயரம்.. குஷ்பு முதல் வெங்கட் பிரபு வரை பிரபலங்கள் இரங்கல்!
அந்த வகையில் நடிகர் விவேக் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
எளிமை இனிமை உழைப்பு உயர்வு ! இப்பூக்கள் பூத்த "வசந்த்"தகாலம் விடை பெற்றதே. எனக்கு அவர் நல்ல நண்பர். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் வசந்த்&கோ, வசந்த் டிவி பணியாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.