Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இசையின்றி நாட்கள் விடிவதில்லை.. எம்எஸ்வியுடன் எஸ்பிபி.. அரிய போட்டோவை ஷேர் செய்து உருகிய விவேக்!
சென்னை: எம்எஸ்வியுடன் எஸ்பி பாலசுப்ரமணியம் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியுள்ளார்.
Recommended Video
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் கடந்த சனிக்கிழமை சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்யப்பட்டது.
250 படங்களில் நடித்தவர்.. 53 வயதில் நுழைவுத் தேர்வு எழுதிய குணசித்திர நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து!
கலந்துள்ள குரல்
எஸ்பிபியின் மறைவை இன்னமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எஸ்பிபி மறைந்துவிட்டார் என்பதையும் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. விடியல் முதல் இரவு வரை ஏதாவது ஒரு தருணத்தில் எஸ்பிபியின் குரல் பலரது வாழ்க்கையில் இரண்டரக் கலந்துள்ளது.
விவேக் டிவிட்
எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான நினைவுகளை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றறை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
எஸ்பிபியும் எம்எஸ்வியும்
இசையமைப்பாளர் எம்எஸ்வியுடன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தப்படி சிரித்து பேசும் போது எடுத்த போட்டோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள்!அந்தக் குரலில் குழைந்த பாட்டுக்கள்! இந்தப் பயணம் முடிவதில்லை: இசையின்றி நாட்கள் விடிவதில்லை! என்றும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
குருவை மிஞ்சி விட்டார்
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு போட்டோவை பகிர்ந்ததற்கு நன்றி சார் என நடிகர் விவேக்குக்கு நன்றி கூறியுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த குருவுடன் சிஷ்யன்....எம் எஸ் வியின் சாதனைகளில் ஒன்று.... இந்த சிஷ்யன் குணத்தால் குருவை கூட மிஞ்சி விட்டார்... என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.