Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்.. ஆனால்.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அட்வைஸ்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிரெவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரபலங்கள் பாதிப்பு
அதேநேரத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அச்சத்தை போக்க..
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
அச்சம் தேவையில்லை
அந்த வகையில் நடிகர் விவேக் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், 'பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.
Recommended Video
பெரிய பாதிப்பு இருக்காது
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.