Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்.. ஆனால்.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அட்வைஸ்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிரெவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரபலங்கள் பாதிப்பு
அதேநேரத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அச்சத்தை போக்க..
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
அச்சம் தேவையில்லை
அந்த வகையில் நடிகர் விவேக் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், 'பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.
Recommended Video
பெரிய பாதிப்பு இருக்காது
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.