Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் !
சென்னை : கொரோனாவாக்கு இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று யோகி பாபு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில். இந்தியா அவசரநிலையை அறிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பலரும் வீட்டிலே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 900 தாண்டியுள்ளது. 20ற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் .
இந்நிலையில், யோகிபாபு வீடியோ ஓன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், உருக்கத்துடன் இனி ஒரு உயிர் கூட போக கூடாது என்று கூறியுள்ளார் மேலும் அனைவரும் வீட்டில் இருங்கள் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மோசமானது என்று வருந்தி கூறினார் .
மேலும் இந்த நேரத்தில் கடவுள் நம்மை காப்பாற்றுவார். மிகவும் தைரியமாக இருங்கள் என்று மக்களுக்கு மெல்லிய குரலில் ஆறுதல் கூறினார் யோகிபாபு. பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் உள்ள நிலையில் யோகிபாபு பேசி இருப்பது ஆறுதலாக உள்ளது.
யோகிபாபுவின் திருமண வரவேற்பு விழா வரும் வாரத்தில் நடக்கவிருந்த நிலையில். தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலுக்கு 14 பிறகு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை இன்னும் அதிக படியான கட்டுபாடுகளுடன் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அரசு எடுத்து வரும் முடிவுகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று பல பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் வீடியோ பதிவின் மூலம் இதனை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களை தாண்டி உங்களின் குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.