Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய யோகிபாபு!
சென்னை : நகைச்சுவை நடிகர் யோகிபாபு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி.. வாழ்த்தும் ரசிகர்கள்!
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின்,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூர்யா, விஷால் உள்ளிட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
புனித் ராஜ்குமார் மறைவு
46 வயதே ஆன பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29ந் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிசிக்சை பலன் அளிக்காமல் மாலையில் உயிரிழந்தார். இவரின் மரண செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முழு அரசு மரியாதையுடன்
அவரது உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
யோகிபாபு அஞசலி
இந்நிலையில், நகைக்சுவை நடிகர் யோகிபாபு, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை யோகிபாபு தனது ஸ்டாகிரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நினைவஞ்சலி கூட்டத்தில்
கடந்த வாரம் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட விஷால், புனீத்தின் மரணம் தன்னை மிகவும் பாதித்தாகவும், இரண்டு நான் தூங்காமல் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், அவர் படிக்க வைத்து வரும் 1800 குழந்கைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.