Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய யோகிபாபு!
சென்னை : நகைச்சுவை நடிகர் யோகிபாபு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி.. வாழ்த்தும் ரசிகர்கள்!
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின்,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூர்யா, விஷால் உள்ளிட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
புனித் ராஜ்குமார் மறைவு
46 வயதே ஆன பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29ந் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிசிக்சை பலன் அளிக்காமல் மாலையில் உயிரிழந்தார். இவரின் மரண செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முழு அரசு மரியாதையுடன்
அவரது உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
யோகிபாபு அஞசலி
இந்நிலையில், நகைக்சுவை நடிகர் யோகிபாபு, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை யோகிபாபு தனது ஸ்டாகிரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நினைவஞ்சலி கூட்டத்தில்
கடந்த வாரம் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட விஷால், புனீத்தின் மரணம் தன்னை மிகவும் பாதித்தாகவும், இரண்டு நான் தூங்காமல் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், அவர் படிக்க வைத்து வரும் 1800 குழந்கைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.