'பருக்கை' குறும்படத்தை விளம்பர படுத்திய யோகி பாபு
சென்னை :யோகி பாபு கடைசியாக தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த பிகில் படத்தில் நடித்திருந்தார் . தற்போது தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகர்களில் ஒருவர் யோகி பாபு .
யோகி பாபு அமீரின் 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமாகினார் . யோகி படத்தின் மூலம் அறிமுகமாகியதன் மூலம் இவருக்கு யோகி பாபு என்ற பெயர் வந்தது .யோகிபாபு படிபடியாக சிறு சிறு வேடங்களில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

தற்போது யோகி பாபு மிகவும் பிஸியாக இருக்கிறார் .அவர் பிகில் பட இசைவெளியீட்டில் கலந்து கொண்டார் அப்போது கூட தளபதி விஜய் 'யோகி பாபு அவரின் கட்டிய புது வீட்டிற்கு கூட போக முடியாமல்' அந்த அளவுக்கு பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் என்று விஜய் புகழ்ந்து கூறியிருந்தார் .
தற்போது யோகி பாபு 'பருக்கை' என்ற குறும்படத்தை பற்றி பேசிய காணொளியை சமூக வலைத்தளத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான மனோ பாலா வெளியிட்டிருக்கிறார் . அந்த காணொளியில் இந்த குறும்படம் மிகவும் அழுத்தமாக இருந்ததாகவும் ,ஒரு பருக்கை சோற்றிற்காக ஒரு குடும்பம் படும் கஷ்டம் மிக கொடுமையாக இருந்தது ,அதில் நடித்த சிறுவன் மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தான் அவனை பார்க்கும் போது என்னை சிறுவயதில் பார்த்தது போல இருந்து என்று யோகிபாபு கூறினார் .

பருக்கை குறும்படம் மனோ பாலாவின் எழுத்தில் உருவாகி இருக்கிறது ,கதைப்படி கணவனின் இறப்பிற்கு பிறகு இரு குழந்தைகளை வைத்து வாழ போராடும் தாய் ,ஒரு பருக்கை சோற்றிற்காக அவர்கள் எப்படி போராடுகிறார்கள் ,கடைசியில் உணவு கிடைத்ததா என்பது தான் கதை . குறும்படம் மிக நேர்த்தியாக இருந்தது ,டப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம் .



Click it and Unblock the Notifications











