Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாழ்வாதாரத்தை இழந்த நடிகர் சங்க உறுப்பினர்கள்… உதவ முன்வந்த நடிகர், நடிகைகள் !
சென்னை : ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல நடிகர், நடிகைகள் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
எங்கம்மா சொர்க்கத்துக்கு போன நாள் இன்னைக்கு.. கலங்கிய கண்களோடு உருகும் இமான்.. வைரலாகும் போஸ்ட்!
அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50 ஆயிரம் ரூபாயும், நடிகை லதா 25 ரூபாயும் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்கம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா
கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
நடிகை, நடிகர்கள் உதவுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளை குழுவின் உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ரூ1 லட்சம் நிதி உதவி
ஊரடங்கால் திரையுலகத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வரும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 50 ஆயிரம், நடிகை லதா 25 ஆயிரம், நடிகர் விக்னேஷ் 10 ஆயிரம் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டன.
நிவாரண பொருட்கள் வழங்கினார்
இதேபோல பூச்சி முருகன் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல பழம் பெரும் நடிகை ஜெயச்சித்ரா 200 க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.