Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாழ்வாதாரத்தை இழந்த நடிகர் சங்க உறுப்பினர்கள்… உதவ முன்வந்த நடிகர், நடிகைகள் !
சென்னை : ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல நடிகர், நடிகைகள் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
எங்கம்மா சொர்க்கத்துக்கு போன நாள் இன்னைக்கு.. கலங்கிய கண்களோடு உருகும் இமான்.. வைரலாகும் போஸ்ட்!
அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50 ஆயிரம் ரூபாயும், நடிகை லதா 25 ரூபாயும் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்கம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா
கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
நடிகை, நடிகர்கள் உதவுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளை குழுவின் உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ரூ1 லட்சம் நிதி உதவி
ஊரடங்கால் திரையுலகத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வரும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 50 ஆயிரம், நடிகை லதா 25 ஆயிரம், நடிகர் விக்னேஷ் 10 ஆயிரம் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டன.
நிவாரண பொருட்கள் வழங்கினார்
இதேபோல பூச்சி முருகன் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல பழம் பெரும் நடிகை ஜெயச்சித்ரா 200 க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.