Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான உரிமையியல் வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு மீண்டும் பரிந்துரை!
சென்னை: நடிகர் சங்க தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரிய உரிமையியல் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பரிந்துரைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இந்த தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தலை நிறுத்தி வைத்த சங்க பதிவாளரின் உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்
இதையடுத்து, தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சிமின் மற்றும் ஏழுமலை தொடர்ந்த உரிமையியல் வழக்குகளையும் ஒரே நீதிபதியின் முன் பட்டியலிடும்படி, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
கடந்த 20ஆம் தேதி நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ரிட் வழக்கும், உரிமையியல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவதை தவிர்க்க, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட, வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.