நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ் பரபர பேட்டி
பெங்களூர்: திரைப்பட நடிகர்கள் தலைவரானால் அது நாட்டிற்கு பேரழிவு என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். உலக நாயகன் கமல் ஹாஸனோ நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்தார்.

வருங்கால முதல்வர் ரஜினி தான், கமல் தான் என்று அவர்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். திரைப்பட நடிகர்கள் தலைவரானால் அது நாட்டிற்கு பேரழிவு என்றார்.


Click it and Unblock the Notifications











