Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சஸ்பெண்டை கொண்டாட தேங்காய் உடைப்பு: விஷால், வாராகி தரப்புக்கு இடையே மோதல்
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வரவேற்று வாராகி மற்றும் எதிர்ப்பு நடிகர்கள் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தனர். அப்போது விஷால் மற்றும் வாராகி தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக தொடர்ந்து பேசி வந்ததாக குற்றம் சாட்டி அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக நடிகர் வாராகி மற்றும் எதிர்ப்பு நடிகர்கள் நடிகர் சங்க வளாகத்தில் இருக்கும் வித்ய கணபதிக்கு 108 தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தேங்காய் உடைப்பின்போது விஷால் தரப்புக்கும், வாராகி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியதில் நடிகர் சங்கம் கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததாக வாராகி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து வாராகி ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திடம் கூறியதாவது,
நடிகர் சங்க முறைகேடுகளை பத்திரிகையாளர்களிடம் நாங்கள் தெரிவித்தோம் என குற்றம்சாட்டி 26 பேரை விஷால் தரப்பு சஸ்பெண்ட் செய்தது. இதை நியாயப்படுத்தியும் பேசி வருகின்றனர்.
தற்போது விஷால் பேட்டி கொடுத்தார் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் விஷால் இதை ஏற்க மறுத்து வருகிறார். நாங்கள் பேட்டி கொடுத்ததால் நடவடிக்கை எடுத்தது சரி என்றால் விஷால் பேட்டி மீதான இந்த நடவடிக்கையும் சரி தானே?
விஷால் முதலில் தம்முடைய முதுகில் உள்ள அழுக்கை துடைத்துவிட்டு அடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.