twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர்: இயக்குனர் சேரன் வருத்தம்

    By Siva
    |

    Actors keep me at bay: Cheran
    சென்னை: என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர் என்று இயக்குனர் சேரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    சேரன் ஜே.ஜே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யா மேனன், காமெடியனாக சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

    அப்போது சேரன் பேசியதாவது,

    ஆட்டோகிராப் படத்தில் நடிக்குமாறு பலரை அணுகினேன். அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தேன். என்னதான் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. அதனால் தான் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இயக்குகிறேன்.

    நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பு தான் இந்த படம். தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்தை துவங்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை. அதனால் கதையை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர்.

    ஆட்டோகிராப் படத்தை ஆரம்பித்தபோது வந்தது போன்று கோபம் வந்தது. இந்நிலையில் சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். நித்யா மேனனும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படத்தை முடித்துவிட்டோம். என் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இது மாடர்னாக இருக்கும் என்றார்.

    English summary
    Director Cheran feels sad as actors refuse to act in his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X