Don't Miss!
- News அள்ள அள்ள அவ்வளவு தங்கம்.. 7 கோடி ரூபாய்.. சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிரபல நடிகர் கேகேபி.கோபாலகிருஷ்ணன் காலமானார்.. நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு மாமாவாக நடித்தவர்!
சென்னை: பிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 54.
ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணன். இவர் சசிக்குமாரின் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு மாமாவாகவும் நடிகை அனன்யாவுக்கு அப்பாவாகவும் நடித்துள்ளார்.
இதேபோல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும் நடிகர் சத்யராஜிக்கு ஜால்ரா போடும் நான்கு பேரில் ஒருவராக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேகேபி கோபாலகிருஷ்ணன். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் கேகேபி கோபாலகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது.
ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்களின் மத்தியில் பெரும் பிரபலமானார் கேகேபி கோபாலகிருஷ்ணன். அவரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணனின் மறைவு செய்தியை கேட்டு திரைத்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான குப்பகவுண்டம்பாளையத்தில் நடைபெறும் என தெரிகிறது.
சீமராஜா படத்தில் இவர் சமந்தாவின் அப்பாவாக வந்து, அமைதியான நடிப்பால் பேசப்பட்டார். நாடோடிகள் படத்தில் இவரிடம் சசிகுமார் பேசும் பட் அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு என்ற வசனம் மிகவும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.