Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு
சென்னை: நடிகர்கள் ராமராஜன், அருண்பாண்டியன் மற்றும் தியாகு ஆகியோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற நடிகர் ராமராஜன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் தியாகுவும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராமராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?. ஓயாமல் பொறுப்பாக செயல்படுபவர் என்பது தான் அர்த்தம். பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை.
அம்மா
அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ். அப்படிப்பட்டவர் தான் நம் முதல்வராக இருக்க வேண்டும். அம்மாவின் மறைவுக்கு பிறகு எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்துவிட்டது.
தலைவர்
ஓ. பன்னீர்செலவம் தான் தற்போது நம்முடைய தலைவர். அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழி நடப்பவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
தியாகு
ஓ. பன்னீர்செல்வம் தான் நிஜ கதாநாயகன் என நடிகர் தியாகு கூறியுள்ளார். ராமராஜன், தியாகு தவிர்த்து நடிகர் அருண்பாண்டியனும் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.