Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே!
சென்னை: இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என எஸ்பிபிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டு மொத்த இசை பிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாது இழப்பு என வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் குடியரசுத் தலைவர்
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்
இதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய்குமாய், சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசை இருக்கும் வரை
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி
மேலும் எஸ்பிபியின் படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்றும் உங்கள் நினைவுகளுடன் என குறிப்பிட்டுள்ளார்.
மனோபாலா
இதேபோல் நடிகர் மனோபாலா பதிவிட்டுள்ள டிவிட்டில், அரசுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்.. எங்கள் எஸ்பிபி அண்ணாவுக்கு அரசு மரியாதையோடு அவரை அடக்கம் செய்தால் மரியாதை.. 6 தேசிய விருதுகள்...எக்கசக்க விருதுகள்...பரீசிலிக்க வேண்டுகிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.