Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தடையை மீறி கொடைக்கானலுக்கு ஜாலி ட்ரிப்.. ஏரியில் மின்பிடித்த நடிகர்கள் சூரி, விமலுக்கு அபராதம்!
சென்னை: தடையை மீறி கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல் மற்றும் சூரிக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பக்கத்து மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட இபாஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சுற்றுலாத் தளங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நக்மா vs கங்கனா.. பாலிவுட்டிலும் தொடங்கிய லேடீஸ் ஃபைட்.. சிக்கித் தவிக்கும் பல பிரபலங்கள்?
தடையை மீறி கொடைக்கானலுக்கு சென்ற அவர்கள் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்துள்ளனர். அவர்கள் மீன் பிடித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் கொடைக்கானலுக்கு வந்ததோடு தடை செய்யப்பட்ட பேரிஜம் பகுதியில் மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்ததையும் மாவட்ட வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.