Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
லாக்டவுனும் முடியல...ஷுட்டிங்கும் நடக்கல...விவசாயிகளாகும் நடிகர்கள்
சென்னை : கொரோனா, லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் ஏற்கனவே துவங்கிய படங்களையும் முடிக்க முடியவில்லை. புதிதாக படம் துவங்க முடியவில்லை. லாக்டவுன் தளர்வுகள் வந்தாலும் மீண்டும் லாக்டவுன் வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தால் பலரும் புதிய படங்களை துவக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட பெரிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்படாமலும், ரிலீஸ் எப்போது என தெரியாமலும் முடங்கி கிடக்கின்றன. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு இருப்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என தெரியவில்லை.
திரையுலகமே முடங்கி போய் உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகின்றனர். அப்படி தாங்கள் லாக்டவுன் சமயத்தில் என்ன செய்கிறோம் என்பதை சமூக வலைதளங்களில் ஃபோட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு, ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள்
நடிகைகள் பலர் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி வருகிறார். சிலர் யோகா, சமையல், தோட்ட பராமரிப்பு, செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடுவது போன்றவைகள் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் நேரடியாக களத்தில் இறங்கி ஏழைகளுக்கு உணவு வழங்குவது போன்ற சமூக பணிகளை செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டம்
சமீபத்தில் மாடி தோட்டத்தில் பொழுதை கழிப்பதை வீடியோவாக வெளியிட்டிருந்தார் நடிகை சுகாசினி. இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், இசிஆர்.,ல் தான் புதிதாக வாங்கிய வீட்டில் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பதை வீடியோ மற்றும் ஃபோட்டோவாக வெளியிட்டுள்ளார். என் வீட்டு தோட்டத்தில் என குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வயல்வெளியில் யோகிபாபு
இந்நிலையில் இன்று நடிகர் யோகிபாபுவும் வேட்டி சட்டையில் வயல்வெளியில் நிற்பது போன்ற ஃபோட்டோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன் அருண்விஜய், பரத் போன்ற நடிகர்களும் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது, செடிகள் நடுவது போன்ற ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
கவனத்தை ஈர்க்கும் விவசாயம்
சினிமா வேலைகள் எப்போதும் துவங்கும் என தெரியவில்லை. துவங்கினாலும் கொரோனா பயத்தை மீறி எப்படி படப்பிடிப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளதால், நடிகர்கள் பலரின் கவனம் விவசாயம் பக்கம் திரும்பி உள்ளது. சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வீட்டிற்கு தேவையான காய்கறி, கீரை வகைகளை வீட்டிலேயே விளைய வைத்து வருகின்றனர்.
நிரந்தர வேலை தரும் விவசாயம்
கொரோனா பலரின் தொழில்களை முடக்கினாலும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த விவசாயிகளின் பக்கம் பலரின் கவனத்தை திருப்பி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. கொரோனா, லாக்டவுன் என எது வந்தாலும் எப்போதும் நிச்சயம் வேலை இருக்கும் என்பதால் நடிகர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களின் கவனமும் விவசாயம் பக்கம் திரும்பி உள்ளது. இது நல்ல மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.