Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குஷ்புவுக்கு ஆதரவாக துணை நடிகை, நடிகர்கள் சென்னை: நடிகை குஷ்புவுக்கு எதிராக நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்குஎதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர், நடிகைகள் சுமார் 200 பேர் நடிகர் சங்க வளாகத்திற்குள், பலத்த போலீஸ்பாதுகாப்புடன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.கல்யாணம் ஆகாத இளம் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்ற புரட்சிகரமானகருத்தைத் தெரிவித்துள்ளார் குஷ்பு. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குஷ்புவைக் கண்டித்து நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், துடைப்பம்,செருப்பு உள்ளிட்டவற்றுடன் கூடி போராட்டம் நடத்தினர்.குஷ்புவைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாமகவும்போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.இந் நிலையில், துணை நடிகர், நடிகையர் 200 பேர், நேற்றிரவு இரவு 8 மணியளவில் சங்க வளாகத்தில் குழுமினர். நடிகைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் ஆபாசமாக பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிதுநேரம் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.இரவில் வந்து போராட்டம் நடத்தியது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், கடந்த 53 வருடங்களாக இந்தநடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இதுவரை 5 முதல்வர்களைக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட எங்களைப் பற்றிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளனர்.இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குஷ்பு பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கசெயற்குழுக் கூடவுள்ளது.அப்போது இப்பிரச்சினை குறித்து விவாதிப்போம் என்றனர்.துணை நடிகர், நடிகையரின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர்.
சென்னை:
நடிகை குஷ்புவுக்கு எதிராக நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்குஎதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர், நடிகைகள் சுமார் 200 பேர் நடிகர் சங்க வளாகத்திற்குள், பலத்த போலீஸ்பாதுகாப்புடன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.
கல்யாணம் ஆகாத இளம் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்ற புரட்சிகரமானகருத்தைத் தெரிவித்துள்ளார் குஷ்பு. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குஷ்புவைக் கண்டித்து நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், துடைப்பம்,செருப்பு உள்ளிட்டவற்றுடன் கூடி போராட்டம் நடத்தினர்.
குஷ்புவைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாமகவும்போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந் நிலையில், துணை நடிகர், நடிகையர் 200 பேர், நேற்றிரவு இரவு 8 மணியளவில் சங்க வளாகத்தில் குழுமினர்.
நடிகைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் ஆபாசமாக பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிதுநேரம் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இரவில் வந்து போராட்டம் நடத்தியது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், கடந்த 53 வருடங்களாக இந்தநடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இதுவரை 5 முதல்வர்களைக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட எங்களைப் பற்றிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குஷ்பு பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கசெயற்குழுக் கூடவுள்ளது.அப்போது இப்பிரச்சினை குறித்து விவாதிப்போம் என்றனர்.
துணை நடிகர், நடிகையரின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர்.