விபச்சாரம்-நடிகை சொப்னா கைது
ஆடம்பர பங்களாவில் விபச்சாரத்தில்ஈடுபட்ட டிவி நடிகை சொப்னா கைதுசெய்யப்பட்டார்.
முகூர்த்தம், மலர்கள் உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர்நடிகை சொப்னா. இவர் ஆடம்பர பங்களாவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் போல வேடமிட்ட போலீஸார் அந்தபங்களாவுக்குச் சென்றனர். பங்களாவுக்கு வெளியே ஆட்டோவில் அமர்ந்திருந்தபெண் புரோக்கர் ஈஸ்வரியிடம் பேச்சு கொடுத்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்ட ஈஸ்வரி, அவர்களை நடிகை சொப்னாவிடம் அழைத்துச்சென்றார்.
போலீஸார் வீட்டுக்குள் சென்றபோது நடிகை சொப்னா, தாஸ் என்றவாடிக்கையாளருடன் படு மும்முரமாக தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து அவர்களை கையும், களவுமாக போலீஸார் பிடித்தனர். புரோக்கர்ஈஸ்வரியையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சொப்னாவுக்கு மெயின் தொழிலே விபச்சாரம் தானாம். அதில்ஈடுபட்டுக் கொண்டே டிவி தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில்வைக்கப்பட்டுள்ளார்.
அதே போல அசோக் நகரில் இன்னொரு வீட்டில் விபச்சாரம் நடத்தி வந்தஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, மும்பையைச் சேர்ந்த பிங்கி ஆகிய இரு பெண்களும்கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சினிமாவில் நடிக்க வந்து, புரோக்கர்களிடம் சிக்கி விபச்சாரத்தில்தள்ளப்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications