Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அப்பாவின் மரணத்தால் இத்தனை நாள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன்.. நடிகை உருக்கம்!
சென்னை: தனது அப்பாவின் மரணத்தால் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்ததாக நடிகை ஆன்யா சிங் கூறியுள்ளார்.
இந்தியில் வெளியான கைய்தி பேன்ட் படத்தில் நடித்தவர் ஆன்யா சிங். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு வெளியானது.
இதைத்தொடர்ந்து படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஆன்யா சிங், கார்த்திக் ராஜு தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் கண்ணாடி படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கண்ணாடி படத்தின் மூலம் ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
ஒருவேளை இன்னைக்கு குறும்படம் இருக்குமோ?அததான் கமல் இப்படி சொல்றாரோ?
அதாவது 2017ல் தனது முதல் இந்தி படம் வெளியான போது தனது தந்தை புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள பல மாதங்களானதால் தன்னால் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
தான் நடித்த கைதி பேண்ட் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் ராஜு, சந்தீப் கிஷன் ஜோடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய கண்ணாடி படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்ததாக கூறியுள்ள ஆன்யா சிங் தற்போது தமிழில் பேச கற்றுக்கொள்கிறேன் என்றார்.